MENU

Fun & Interesting

பவாரியா கொள்ளையர்களை வேட்டையாடிய நிஜத் தீரன்!!

Sithannan - The Eyeopener 316,496 5 years ago
Video Not Working? Fix It Now

The unsung heroes! கொண்டாடப்படாத உண்மையான கதாநாயகர்கள்! பவாரியா கொள்ளையர்களை கண்டுபிடித்த நிஜத் தீரன்!!! 1991 முதல் 2005 வரை தமிழ்நாட்டில் புறநகர் பகுதிகளில் தனித்திருக்கும் பங்களாக்களில் இரவு நேரங்களில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கடப்பாரை கொண்டு கதவை உடைத்து, உள்ளே இருக்கின்ற நபர்களை கொலை செய்து, பணம் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்றது. இதுபோன்ற சம்பவம் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுமையிலும் நடைபெற்றது. ஆனால் எல்லா மாநில காவல் துறையினரும், இந்த வழக்கை கண்டு பிடிக்க முடியாமல் திணறினர். தமிழ்நாட்டில் 2005இல் AIADMK கட்சியைச் சேர்ந்த கும்மிடிபூண்டி எம்எல்ஏ சுதர்சனம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு, முகமூடிக் கொள்ளையர்களால் அவரது வீடு கொள்ளையடிக்கப்பட்ட பின்பு, அப்போதிருந்த IG ஜாங்கிட் (then DGP Retd) அவர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை முடுக்கி விடப்பட்டது. 2005 ஜனவரி 14ஆம் தேதியன்று தங்கள் பயணத்தை துவக்கிய தனிப்படை ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு மேல் காரிலேயே பயணித்து, கடைசியில் அந்த தனி படையைச் சேர்ந்த தனஞ்செயன் என்ற கைரேகை நிபுணர் தமிழ்நாட்டில் ஏற்கனவே குற்ற சம்பவ இடத்தில் பதிவாகியிருந்த கைரேகையை வைத்து ஒப்பிட்டு, பவாரியா கொள்ளை கூட்டத்தை சேர்ந்த நபரின் கைரேகை தான் என்று முதன்முதலில் கண்டுபிடித்து, இந்த வழக்கை முழுவதுமாக கண்டுபிடிப்பதற்கு உதவிகரமாக இருந்தார். எந்தவித Digitization எதுவுமே இல்லாத அந்த காலத்தில், ஞாபக சக்தியை மட்டுமே வைத்து, பவாரியா கொலைகாரர்களை அடையாளம் கண்ட திரு தனஞ்செழியன் உண்மையிலேயே ஒரு தீரன்தான். Website: https://www.sithannan.com Facebook : https://www.facebook.com/vsithannan/ Twitter : https://twitter.com/sithannan LinkedIn : https://www.linkedin.com/in/sithannan... Instagram :https://www.instagram.com/sithannanv/

Comment