MENU

Fun & Interesting

சீரடியில் மட்டை தேங்காய் பிரார்த்தனை ஏன் செய்ய வேண்டும்? | ஒரு தெளிவான விளக்கம் @ Sai Mahima Tv

Video Not Working? Fix It Now

ஓம் சாய்ராம் மட்டை தேங்காயை ஏன் நாம் துனியில் சமர்ப்பிக்கின்றோம் ? பாபா வாழ்ந்த காலத்தில் அவர் பக்தர்களிடம் தானே தேங்காயை தட்ஷனையாக பலமுறை கேட்டதுண்டு.. பாபா மட்டும் இன்றி பல குருமார்களுக்கு பக்தர்கள் தேங்காய் சமர்ப்பித்தனர் என்பதற்கு ஆதாரங்கள் நிறைய இருக்கின்றது. பாபா வாழ்ந்த காலத்தில் ஒரு பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொடுக்க வேண்டி பக்தர்கள் அவர்களே மனதார பாபாவுக்கு தேங்காயை தட்சிணையாக வழங்கினர். ஆனால் இன்று பாபா உருவத்தில் இல்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் பாபா அவருடைய நினைவாக தான் ஏற்றி வைத்த அக்னி குண்டத்தை நமக்காக விட்டுவிட்டு தான் சென்றிருக்கிறார். அந்த அக்னி குண்டத்தை பாபா எப்படி எல்லாம் பராமரித்தார் என்பது நாம் அனைவருக்கும் தெரியும். ஸ்ரீ சாய் சத்சரிதம் மட்டுமல்லாது பல மகாபக்தர்கள் எழுதிய புத்தகத்தில் அதைப்பற்றிய குறிப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது. பாபாவுக்கு பின்னர் அந்த துனியை சிவனேசன் சுவாமிஜி பராமரித்து வந்தார் என்பதும் நாம் அறிந்ததே. உதி என்பது மாமருந்து மட்டும் கிடையாது நம்முடைய கர்மாவை பஸ்பமாக அழிக்கக்கூடிய சக்தி கொண்டவை ஆகும். மனிதன் இந்த உலகத்தை விட்டு செல்லும் பொழுது எந்த ஒரு பற்றும் இல்லாமல் கடைசியில் சாம்பலாகத் தான் செல்கிறார் என்பதை இந்த உதி நமக்கு உணர்த்துகிறது. அதோடு பக்தர்களுக்கு பயத்தையும், கவலையையும், அபாயத்தையும் போக்கும் விதமாக ஒரு பவித்திரமான கவசமாக இருக்கிறது. அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்த உதியை பாபா ஒவ்வொரு நாளும் தன்னுடைய பக்தர்களுக்கு நெத்தியில் இட்டு விட்டும், உச்சந்தலையில் அழுத்தியும், ஆக்னிய சக்கரத்தை செயல்பட செய்து பல்வேறு வகையான குறைகளில் இருந்தும், நோய்களிலிருந்தும் அவருடைய பக்தர்களை குணமாக்கியும் இருக்கிறார். பாபா வாழ்ந்த காலத்தில் அவர் தேங்காயை தானே கேட்டார் என்றால் இன்று பாபா உருவத்தில் இல்லை அவருடைய துனி தான் இருக்கிறது.. அவர் கேட்ட தேங்காயை அவர் ஏற்றி வைத்த துனியில் சமர்ப்பிக்கும் போது, பாபா அதைப் பெற்றுக் கொண்டு நம்முடைய நோய் நொடியையும், கவலைகளையும் பிரச்சனைகளையும் பஸ்பம்மாகி நம்முடைய கர்மாக்களை சரி செய்து நமக்கான தேவைகளை, நன்மைகளை மட்டுமே வழங்குகிறார் என்பது பல பேருடைய அனுபவபூர்வமான உண்மையாகும். நிறைய விஷயங்களை பாபா நேரடியாக என்றைக்குமே தெரிவித்தது கிடையாது.. சூட்சமமான முறையில் மட்டுமே அதை மற்றவர்களுக்கு புரியும்படி செய்தார். உதாரணத்துக்கு சொல்ல வேண்டும் என்றால் ஒரு முறை யாரோ ஒரு பக்தர் ஜோதிடம் சம்பந்தப்பட்ட புத்தகத்தை பாபாவிடம் ஆசீர்வதித்து அருள்மாறு கூறினார். ஆனால் பாபா அதை ஆசீர்வதித்து ஸ்ரீமான் பூட்டியிடம் கொடுத்தார். மகாபத்ரான பூட்டி பாபா ஏன் அந்த புத்தகத்தை அவரிடம் கொடுத்தார் என்ற கேள்வியை கேட்கவில்லை. அதற்கு பதிலாக பாபா தனக்கு கொடுத்தார் என்றால் அதில் ஆழமான அர்த்தம் இருக்கும் என்று நினைத்து, ஜோதிடத்தை மிக தீவிரமாக படிக்க ஆரம்பித்தார். மிகவும் பணக்காரருமான வசதியான குடும்பத்தை சேர்ந்தவருமான பூட்டி ஜோதிடத்தை கற்றுத் தேர வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆனால் பாபா அவரிடம் அந்த புத்தகத்தை கொடுத்தார் என்ற ஒரே காரணத்தால் ஜோதிடத்தை படித்து பல பேருக்கு அவர் ஜாதகத்தைப் பார்த்து சொன்னதில் பளித்தது.. அதைத்தான் பாபா விருப்பப்பட்டார்.. அதே போலத்தான் பாபா செய்த நிறைய விஷயங்களை அவர் சொல்லவில்லை என்றாலும் சூட்சுவமான உள்ள அர்த்தங்கள் அடங்கியிருப்பதை நமக்கு உணர்த்துகிறார். ஆக பாபா இன்றும் உதி என்ற ரூபத்தில் வாழ்ந்து கொண்டு தன்னுடைய பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு தான் இருக்கிறார். தன்னுடைய வாழ்நாளில் அவர் தக்ஷனையாக கேட்டது எல்லாம் ஒன்று இரண்டு காசுகள் மற்றும் தேங்காய் மட்டும்தான். அதைத்தான் நாம் இன்றும் அவருக்கு சமர்பிக்கின்றோம். பாபா இருந்திருந்தால் அவருடைய கைகளில் நாம் தட்ஷனையை கொடுத்திருந்திருப்போம் .அதேபோல தேங்காயை அவருடைய பாதத்தில் சமர்ப்பித்து இருப்போம். பாபா இன்று உருவத்தில் இல்லாத காரணத்தால் அந்த காசை உண்டியலிலும், தேங்காயை துனியிலும் சேர்க்கும் பொழுது அதை பாபா ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையோடு ஒவ்வொரு பக்தர்களும் இன்றைக்கும் சீரடியில் செய்து வருகின்றனர். அதேபோல கோவில் நிர்வாகம் ஒன்றை முடிவு செய்து செயல்பட்டால் அது பாபாவின் உடைய வழிபாடு முறைகளைப் பற்றியும், பக்தர்களின் நம்பிக்கையும் மனதில் வைத்துக் கொண்டுதானே செய்வர். பக்தர்கள் மட்டை தேங்காயை இரும்பு பெட்டிக்குள் போடுவது சரியான முறை என்று கருதி தானே ஆங்கங்கே கோவிலை சுற்றி அது வைக்கப்பட்டிருக்கிறது. கோவில் நிர்வாகம் பக்தர்கள் போடுகின்ற அந்த தேங்காயை வேற எந்த ஒரு விதத்திற்கும் தவறாக பயன்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு அதை செய்வதற்கான அவசியமே கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் எவ்வளவு நன்கொடைகள் வருகிறது என்பதை கோவில் நிர்வாகம் அந்தப் பட்டியலை வெளியிடுகின்றனர். அதை நாம் தெரிந்து கொண்டால் கோயில் நிர்வாகத்தை பற்றி தவறாக சொல்ல மாட்டோம். பல மகா பக்தர்களால் நிர்வகிக்கப்பட்டு வந்தது தான் இந்த சாய் சமஸ்தானம் .. அவர்கள் என்றைக்கும் பாபாவை பற்றியும் பக்தர்களுடைய நம்பிக்கையை காப்பாற்றும் விதத்தில் தான் செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பக்தர்களின் இந்த நம்பிக்கை காரணமாக துவாரகாமாயின் வெளியில் தேங்காயை சமர்ப்பிக்க சௌகரியமாக இருக்க வேண்டி பெரிய இரும்பு பாக்ஸ் வைக்கப்பட்டிருக்கிறது. பக்தர்கள் பாபா இன்றைக்கும் உயிரோடு இருக்கிறார் என்பதை நம்பிக்கையோடும், ஆத்மார்த்தமாக கருதி அவர்களுடைய கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்று நினைத்து அந்த இரும்பு பாக்ஸில் தேங்காயை சமர்ப்பிக்கின்றனர். நம்முடைய கோரிக்கைகளை பாபா நிறைவேற்றிக் கொடுப்பார் என்று அந்த ஆழமான நம்பிக்கை இருந்தால் மட்டும்தானே அதை நாம் செய்ய முடியும் .

Comment