திருப்பூர்:
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு.
வைகோ அரசியலில் ரிடெயர்ட் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இந்திய அரசியலில் அநாகரிகமாக பேசுபவர் என்றால் அது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான். அவர்களுக்கு அவர்கள் பாஷையில் பேசினால் தான் புரிகிறது. மக்களுக்கு தெரிய வேண்டும். என்பதால் பேசுகிறேன்.
சத்துணவு கூடத்தில் அழுகிய முட்டை போடும் கீதா ஜீவன் என்னை பற்றி பேசுவது வியப்பாக உள்ளது.
திமுக குறித்து விமர்சித்து பேசிய வைகோ அய்யா இன்று இப்படி பேசி உள்ளார். திமுக முதல்வர் புகழ் பாடும் ஹோட்டல் குமாஸ்தாவாக மாறியது வருந்தத்தக்கது.
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டி நடந்து கொண்ட விதம் சரியில்லை.
தமிழக காவல் துறை தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார்களோ என ஐயம் எழுகிறது. சம்மன் கொடுத்து போகவில்லை என்றால் நீதிமன்றம் கைது செய்ய ஆணை பிறப்பிக்கும். கேட்டில் ஒட்டுவது ஆச்சரியம் அளிக்கிறது. தேடப்படும் குற்றவாளி வீட்டில் தான் சம்மன் ஒட்டுவார்கள். அடுத்த நாள் சீமான் ஆஜராகவில்லை என்றால் தான் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறை நடந்து கொண்ட விதம் ஏற்புடையதாக இல்லை. ஆதார பூர்வமாக சீமான் மீது அரசு நடவடிக்கை எடுக்கலாம் அவரும் சாமானிய மனிதர் தான்.
காவல் துறை ஒளிவு மறைவின்றி நடந்தால் எல்லோருக்கும் காவல் துறை மீது நம்பிக்கை ஏற்படும்.
தமிழக நிதி 5 மடங்கு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளது. தங்கம் தென்னரசு நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. செய்தியாளர்களிடம் மட்டுமே பேசுகிறார். எந்த நிதி குறைக்கப்பட்டது என கூறினால் விளக்கம் தரப்படும்.
தென் அமெரிக்காவில் இருந்து வரும் மக்காச்சோளம் மத்திய பிரதேச மக்காசோளத்தை விட விலை குறைவு. இதனால் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும். என்பதால் தான் வரி விதிக்கப்பட்டது. தொடர்ந்து பிரச்சினை ஏற்பட்டால் அதற்கும் தீர்வு காணப்படும்.
திருமாவளவன் பள்ளிக்கு மட்டும் தான் பாதுகாப்பு. இரவோடு இரவாக பொறுப்பாளர்களை மாற்றி விட்டார். திருமாவளவன் கூறும் கம்பி கட்டும் கதையை மக்கள் எத்தனை நாட்கள் ஏற்பார்கள். தமிழ் மொழிக்கு 10 ஆண்டுகளாக மோடி பெருமை பெற்று கொடுத்துள்ளார். கலாச்சாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கை எங்கும் மேற்கொள்ளப்பட வில்லை.
ஆணவத்தை எப்போது மக்கள் ஏற்க மாட்டார்கள். திமுகவினர் குறுநில மன்னர்கள் போல செயல்படுகின்றனர்.
அப்பா ஆப் இல்லை அப்பத்தா ஆப். அதை வைத்து பணம் வசூல் செய்ய துவக்கி உள்ளனர். சிபிஎஸ்இ பள்ளிக்கு ஒர் ஆண்டுகளுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதால் தான் மாநில அரசு அனுமதி விலக்கை மத்திய அரசு வழங்கியது.
என்னோடு மா.சுப்ரமணியம் அண்ணனை என்னோடு வரச்சொல்லுங்கள் நான் கஞ்சா அபின் எது வேண்டுமோ வாங்கி தருகிறேன். பள்ளிக்கூடங்கள் எல்லாம் போதை காடாக மாறி உள்ளது. குழந்தைகள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளிக்கல்வித்துறை செயல்பட்டு வருகிறது.