பழமுதிர்சோலை !.உலகமும் அடியேனும் வாழ, என் முன் விரைந்து வருக இகபர நல்வாழ்வு பெற
· தனதன தான தனதன தான
தனதன தான ...... தனதான
· இரு நில மீதில் எளியனும் வாழ
எனது முன் ஓடி வர வேணும் _ 2முறை
அகரமும் ஆகி, அதிபனும் ஆகி,
அதிகமும் ஆகி, ...... அகம் ஆகி,
அயன் என ஆகி, அரி என ஆகி,
அரன் என ஆகி, ...... அவர்மேலாய்,
இகரமும் ஆகி, எவைகளும் ஆகி,
இனிமையும் ஆகி ...... வருவோனே!
இருநிலம் மீதில் எளியனும் வாழ
எனது முன் ஓடி ...... வரவேணும்.
மகபதி ஆகி மருவும் வலாரி
மகிழ்களி கூரும் ...... வடிவோனே!
வனம் உறை வேடன் அருளிய பூஜை
மகிழ் கதிர்காமம் ...... உடையோனே!
செககண சேகு தகுதிமி தோதி
திமி என ஆடும் ...... மயிலோனே!
திரு மலிவான பழமுதிர் சோலை
மலைமிசை மேவு ...... பெருமாளே.