MENU

Fun & Interesting

தைப்பூசம் 2025 - விரத முறை, வழிபாட்டு முறை & நேரம் | வள்ளலாரின் வழிபாட்டு முறை | Thaipusam 2025

Athma Gnana Maiyam 137,475 9 hours ago
Video Not Working? Fix It Now

#thaipusam #murugan #muruga #தைப்பூசம் #முருகன் #முருகா முருகனிடம் தினமும் சொல்ல வேண்டிய 4 வரி பதிகங்கள் எனது குரலில்| Simple 4 line Padhigangal in my voice https://youtu.be/f-tfFSnFDp8 வேல் மாறல் மஹா மந்திரம் எனது குரலில் (முழுவதும்) | Vel Maral Manthram in my voice https://youtu.be/giySZOIAKvE வீட்டில் வேல் வழிபாடு செய்யும் முறை | "VEL" Worship method at Home explained by Desa Mangayarkarasi https://youtu.be/eLhE25OaEj8 வேல் வகுப்பு பாராயணம் செய்யுங்கள், கந்தர் சஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள் பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி விழிக்குநிக ராகும் பனைக்கமுக படக்கரட மதத்தவள கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை தெறிக்கவர மாகும் பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை யிடித்துவழி காணும் பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல் ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள் புசிக்கவருள் நேரும் சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும் இடுக்கண்வினை சாடும் சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர் ஒளிப்பிரபை வீசும் துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர் நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும் எனக்கோர்துணை யாகும் சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு மறத்தைநிலை காணும் தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை கழற்குநிக ராகும் தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை விதிர்க்கவளை வாகும் தனித்துவழி நடக்குமென திடத்துமொரு வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு பகற்றுணைய தாகும் சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர் பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில் விருப்பமொடு சூடும் திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர நிறைத்துவிளை யாடும் திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை முளைத்ததென முகட்டினிடை பறக்கவற விசைத்ததிர வோடும் சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி விழித்தலற மோதும் திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே நவக்கிரக பிரச்சினைகள் தீர: நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந் தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே பாடல் 1: அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே எந்தை நினதருட் புகழை இயம்பிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவ மார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்பேது நான்செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே. பாடல் 2: ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவுவேண்டும் உள் ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண் டும் பொய்மை பேசாதிருக்கவேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்கவேண்டும் மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் உனை மறவாதிருக்கவேண்டும் மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற வாழ்வில் நான் வாழவேண்டும் தருமமிகு சென்னையில் கந்தகோட் டத்துள் வளர் தலம் ஓங்கு கந்தவேளே தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி சண்முகத் தெய்வமணியே. பாடல் 3 அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. பாடல் 4 எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் ⁠தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை யுடையவராய் உவக்கின்றார் ⁠யாவர் அவர் உளந்தான் சுத்த சித்துருவாய் எம் பெருமான் நடம்புரியும் ⁠இடம் என நான் தெரிந்தேன் அந்த வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திட என் ⁠சிந்தை மிக விழைந்த தாலோ. ஆத்ம ஞான மையம்

Comment