தினமும் 5 முறை 7 நாள் இந்த மந்திரத்தை கூறினால் சகல செல்வங்களும் சேரும்
#gurubhagavanmantra#gurubhagavanmantrainenglish#gurubhagavangayatrimantramtamil#gurubhagavancharacteristics#gurubhagavanbenefits#gurubhagavanluckynumber#gurubhagavannumber
#சிவம்ஆடியோ,#ShivamAudio,#sivamaudio,#sivamaudios,,#gurubhagavannumber,#gurubhagavantamildevotionalsongs,#gurubhagavansongs,#gurubhagavanmandiram,#gurubhagavansaranam,#gurubhagavanwhatsappstatustamil,#gurubhagavanslokam,#alangudigurubhagavan,#gurubhagavanstatus,@gurubhagavanphoto,#bombaysaradhadevotional #bombaysaradhadevotionalsongs #bombaysaradhadevotionalsongs
குரு பகவான் மந்திரம்: நினைத்ததை நிறைவேற்றி, செல்வத்தை பெருக்கும் அற்புத மந்திரம்
குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள். குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி. இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.
guru-f
குரு பார்க்க கோடி நன்மை, குருவருள் இருந்தால்தான் திருவருளைப் பெறமுடியும் என்பார்கள். குருவே சகலத்துக்கும் ஆதாரமாகத் திகழ்பவர் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். குருவின் பார்வை பட்டாலே சகலமும் நமக்குக் கிடைத்தருளும் என்பது ஐதீகம். அதனால் தான் மற்ற தெய்வங்களை எப்படி வழிபடட்டாலும், குரு பகவானை மட்டும் நேருக்கு நேராக நின்று வணங்கச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள்.
தேவகுருவான பிரகஸ்பதி, சிவ பெருமானின் பரிபூரண அருளைப் பெற்று, கிரகங்களில் ஒருவராக இடம் படித்தார். நவக்கிரகங்களில் குருபகவான் எனும் பேறு பெற்றார். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கெல்லாம் அருள்மழை பொழிகிறார். குருவின் பார்வை, குரு யோகம், குருவின் ஆசி இருந்தால்தான் திருமண யோகம் கைக்கூடும் என்கிறது புராணம்.
குரு பகவான் - தட்சிணாமூர்த்தி வேறுபாடு
நம்மில் பலருக்கு குருபகவானுக்கும், தட்சிணாமூர்த்திக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. . நவக்கிரக வரிசையில் வடக்கு பார்த்து அமர்ந்திருப்பவர் குரு பகவான். சிவ ஆலயத்தில் தெற்கு நோக்கி, சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பவர் தட்சிணாமூர்த்தி. இருவருமே ஞானத்தை அருளும் கடவுள் என்றாலும் வித்தியாசத்தினை உணர்ந்து அவரவருக்கு உரிய மந்திரம் சொல்லி வழிபட பரிபூரண அருள் கிட்டும்.
எந்த கிழமையில் எந்த தெய்வத்தை வணங்கினால் வளமான வாழ்வை பெறலாம்?
குரு பகவான் மூல மந்திரம் :
ஓம் ஷ்ரம் ஷ்ரீம் ஷ்ரௌம் ஸஹ் குரவே நமஹ!
எப்படி சொன்னால் என்ன பலன் கிடைக்கும் ?
தங்கம் போன்று ஜொலிக்கும் உடலை கொண்டதால் குருபகவானுக்கு பொன்னன் என இன்னொரு பெயர் உண்டு. கல்வி, அறிவு, திருமணத்திற்கு காரணமான சுபகிரகங்களில் ஒருவரான இவரை தினமும் காலையில் இம்மந்திரத்தினை சொல்லி வணங்கி வருபவர்கள் வாழ்வில் நல்லது நடக்கும். தினமும் சொல்ல இயலாதவர்கள். வியாழக்கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும் இம்மந்திரத்தை 108 முறை அல்லது 1008 முறை ஜெபிப்பவர்களுக்கு பொன் ஆபரண சேர்க்கை, பொருள் சேர்க்கை உண்டாகும். 40 நாட்களில் இம்மந்திரத்தை 16000 முறை ஜெபித்தால் நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்க துவங்கும்.
திருமணமாகாமல் தடைப்பட்டிருந்தவர்களுக்கு திருமண யோகம் கூடிவரும். வீட்டில் தள்ளிப் போன சுபகாரியங்கள் நடந்தேறும். தம்பதி ஒற்றுமை மேலோங்கும். குரு பலம் கூடும். தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். உத்தியோகத்தில் உயர்வு கிடைத்து வாழ்வில் முன்னேற்றம் வரும். கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். ஸ்திரமான சொத்து சேர்க்கை நிகழும். குரு பகவான் காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வந்தால் சுபிட்ச வாழ்வு நிச்சயம்.
குரு வியாழ பகவான் காயத்ரி :
ஓம் வ்ருஷப த்வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்தோ குரு பிரசோதயாத்
இடபக்கொடியைக் கொண்டவனே, தடங்கல்களையும் தடைகளையும் தகர்ப்பவனே. ப்ருஹஸ்பதி வியாழப் பரமகுரு நேசனே. கிரக தோஷமின்றி எங்களை வாழவைத்து அருளுவாய் என்பது இதன் பொருள்.