DHINAM ORU THIRUPADAL | தினம் ஒரு திருப்பாடல் | 10.03.2025 | MADHATV
திபா 19: 7. 8. 9. 14 (பல்லவி: யோவா 6:63b)
பல்லவி: ஆண்டவருடைய வார்த்தைகள் வாழ்வு தரும் ஆவியைக் கொடுக்கின்றன.
7
ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது. ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது; எளியவருக்கு அது ஞானம் அளிக்கின்றது. - பல்லவி
8
ஆண்டவரின் நியமங்கள் சரியானவை; அவை இதயத்தை மகிழ்விக்கின்றன. ஆண்டவரின் கட்டளைகள் ஒளிமயமானவை; அவை கண்களை ஒளிர்விக்கின்றன. - பல்லவி
9
ஆண்டவரைப் பற்றிய அச்சம் தூயது; அது எந்நாளும் நிலைத்திருக்கும். ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை; அவை முற்றிலும் நீதியானவை. - பல்லவி
14
என் கற்பாறையும் மீட்பருமான ஆண்டவரே! என் வாயின் சொற்கள் உமக்கு ஏற்றவையாய் இருக்கட்டும்; என் உள்ளத்தின் எண்ணங்கள் உமக்கு உகந்தவையாய் இருக்கட்டும். - பல்லவி
Check us at: http://www.madhatv.in/
Facebook:
https://www.facebook.com/madhatv
Instagram:
https://www.instagram.com/madha_tv?igsh=dW9ybHFxYnh5amhv
Whatsapp : https://whatsapp.com/channel/0029Va9y2vV6GcG5EWQVBT0N
#dhinamoruthirupadal #madhatvdhinamoruthirupaadal #responsehymn #responsesongs #dhiyanapadal #responsehymntamil #padhiluraipadal #wordofgod #peace #jesuschrist #bible