MENU

Fun & Interesting

First meeting with Veerappan in 1993 - Sivasubramaniam full interview #sethukuligovindan #veerappan

Kasu Velayuthan Views 37,351 3 weeks ago
Video Not Working? Fix It Now

#veerappan #sethukuligovindan #sethukuzhigovindan #veerappanstory #veerappaninterview தனிக்காட்டு ராஜா என்று பாமர மக்களாலும், யானைத் தந்தங்கள் வேட்டைக்காரன், சந்தன கடத்தல் மன்னன் என்று தமிழக- கர்நாடக அதிரடிப்படையினராலும், எங்கள் காவல் தெய்வம் என்று பழங்குடிகளின் குரலாகவும் இருந்தவர் வீரப்பன். 21 ஆண்டுகளாகியும் அவர் என்கெளண்டர் இன்னமும் பல மர்மங்களை உள்ளடக்கியதாகவே உள்ளது. அவர் இருந்த போது விட மறைந்த பிறகு ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள மக்களால் அவரைப் போல் ஒரு வீரன் இல்லை, இனி வரப்போவதும் இல்லை என்று கொண்டாடப்படுகிறார். அப்படியான வீரப்பனை 1993 - இல் முதன்முதலாக சந்தித்து பேட்டி கண்டு எழுதிய ஒரே பத்திரிகையாளர் சிவசுப்பிரமணியம். நக்கீரன், போலீஸ் செய்தி, இந்தியா டுடே உள்ளிட்ட பல பத்திரிகைகளுக்கு செய்தி சேகரித்து அப்போது அளித்துக் கொண்டிருந்த Freelancer நிருபரான அவர் அதற்குப் பிறகு நக்கீரன் இதழிலேயே பணியில் சேர்ந்து வீரப்பன் செய்திகளில் முழுக்கவனம் செலுத்தி அவரைக் காட்டுக்குள் 48 முறை சந்தித்துள்ளார். வீரப்பன் குறித்து போலீஸார் தான் தோன்றித்தனமாக கொடுத்து வந்த செய்திகளை எல்லாம் பொய்யாக்கி வீரப்பன் வாயாலேயே உண்மைகளைக் கொண்டு வந்த பெருமையும் அவரையே சாரும். அப்படிப்பட்ட சிவசுப்பிரமணியம் Shiva Media என்றொரு youtube சேனலை துவக்கி வீரப்பன் குறித்த ஆதியோந்திட செய்திகள் அத்தனையும் தந்து வருகிறார். கூடவே பல பத்திரிகை, மீடியாக்களுக்கு பேட்டிகள் அளிக்கிறார். வீரப்பன் வாழ்ந்ததும், வீழ்ந்ததும் என நான்கு பாகங்கள் கொண்ட நூல்களை எழுதி சமூகத்திற்கு அர்ப்பணித்துள்ளார். இவற்றின் மூலம் வீரப்பன் குறித்து ஆனானப்பட்ட IPS அதிகாரிகள் எழுதின நூல்களில் உள்ள தரவுகள், அவர்தம் பேட்டிகளை எல்லாம் பொய்யாக்கி தோலுரித்தும் வருகிறார். அதனால் இன்றைக்கு வீரப்பன் என்றால் சிவசுப்பிரமணியம் என்ற பெயரே நிலைத்து விட்டது. வீரப்பன் விவகாரத்தில் வீரப்பனிடம் மட்டுமல்ல, அவர் தம் குழுவிடம், அவரின் தொழில் எதிரிகளிடம், அரசியல் புள்ளிகளிடம், தமிழக - கர்நாடக அதிரடிப்படை போலீஸாரிடம் அவர் இதுகாறும் தப்பிப் பிழைத்திருப்பதே தெய்வ பாக்கியம் என்று வீரப்பன் விசுவாசிகளால் போற்றப்படுகிறார். அவர் மட்டும் இல்லை என்றால், அவர் மட்டும் இத்தனை உண்மைகளை வாய் திறந்து பகிரங்கமாக மீடியாக்களிடம் பேசாதிருந்தால் வீரப்பன் செத்தும் 21 ஆண்டு காலமாக வாழ்ந்திருக்க முடியாது. அப்படிப்பட்ட சிவப்பிரமணியம் நமது kasu Velayuthan views youtube சேனலுக்கு தொடர் பேட்டியை அளிக்க சம்மதித்துள்ளார். அவர் வீரப்பனை முதன் முதலாக சந்தித்த போது நடந்த நுண்ணிய விஷயங்களை எல்லாம் இந்த பாகம் - 1 நேர்காணலில் சொல்லி இருப்பது போலவே வீரப்பனுடன் அடுத்தடுத்து நடந்த 48 சந்திப்புகளையும் இயன்ற வரை விவரிக்க உள்ளார். அவற்றை Shorts-களாக, பகுதிகளாக வெளியிடுவதோடு, முழுமையான ஒவ்வொரு பாகங்களாகவும் வெளியிட உள்ளோம். இதுவரை எத்தனையோ சொல்லி விட்டார் சிவசுப்பிரமணியம். இந்தத் தொடர் பேட்டியில் மட்டும் அதைத் தாண்டி என்ன சொல்லி விடுவார் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம் சேனலைத் தொடர்ந்து பாருங்கள். இதுவரை அவர் சொன்னதெல்லாம் செய்திகள். இதில் இனி சொல்லப் போவது எல்லாம் வாழ்க்கை. அந்த அளவு வீரப்பன் - சிவா சந்திப்பில் நிகழ்ந்த ஒவ்வொரு நுண்ணிய சம்பவங்களும் படு யதார்த்தமாக இப்பேட்டிகளில் காண்பீர்கள். - கா.சு. வேலாயுதன்

Comment