இரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான பதற்றம் 6வது நாளை எட்டியுள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 'இஸ்ரேலின் இருப்புக்கே' இரான் அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி அந்நாட்டின் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அதற்குப் பின் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் தாக்கி வருகின்றன.
புதனன்று நடத்தப்பட்ட தாக்குதலில், இரானில் உள்ள யுரேனியம் சென்ட்ரிப்யூஜ் உற்பத்தி நிலையங்கள் மற்றும் ஆயுத தொழிற்சாலைகள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறியுள்ளது.
இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதே இந்த மோதலின் முடிவாக இருக்கும் என இஸ்ரேல் கூறிவருகிறது.
இந்நிலையில் இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி இருக்கும் இடம் தெரியும் என்றும், அவரைக் கொல்லப்போவதில்லை எனவும் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். மேலும் இரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா ஈடுபடுவது குறித்தும் டிரம்ப் ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்பின் போர் தொடங்கிவிட்டது என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலு காமனேயி கூறியுள்ளார். இதானல் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதுவரை இந்த விவகாரத்தில் நடந்தது என்ன? சுருக்கமாகப் பார்க்கலாம்.
#Iran #Trump #Israel
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N
Visit our site - https://www.bbc.com/tamil
பிபிசி சிங்கள சேவை யூட்யூப் சேனலை பார்க்க: https://www.youtube.com/@BBCNewsSinhala