#journalistmaniinterview #journalistmani #dmk #dmknews #dmkstalin #dmkgovt #admk #admkalliance #tamilnadupolitics #tamilnadu #bjp #bjpnews #bjptamilnadu #congress #vck #news #newsheadlines #newstamil #newsupdate #journalist #journalism #tamilnadu #eps #thirumavalavan #tamilnadu #assembly #modi #amitshah #operationsindoor #indianarmy #indiannews
இந்தியா - பாகிஸ்தான் நாடுகள் பரஸ்பரம் மோதலில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் வெடித்தது. இதனிடையே நேற்று மாலை இந்தியா - பாகிஸ்தான் இரண்டு நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த உடன்பாட்டை எட்டியுள்ளன என்று அறிவித்தார். இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்த முடிவை பல்வேறு உலக நாடுகள் வரவேற்றன. ஆனால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பாகிஸ்தான் டிரோன் பறந்தன. பாகிஸ்தான் போர் ஒப்பந்தத்தை மீறியதாக இந்தியாவும் அறிவிப்பு வெளியிட்டது.
பாகிஸ்தான் பங்கு சந்தையில்.. பாசிட்டிவ் சைன்! IMF சலுகை+போர் நிறுத்தத்தால் திடீர் மாற்றம்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பங்கு சந்தை கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்வை எட்டியிருக்கிறது. சண்டை நிறுத்தம் மற்றும் ஐஎம்எஃப் சலுகை காரணமாக இந்த மாற்றம் நடந்திருப்பதாக பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கடந்த சில நாட்களாக இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தது. இது அந்நாட்டின் பங்கு சந்தையிலும் எதிரொலித்தது. அதாவது சண்டை நேரத்தில் அந்நாட்டின் பங்கு சந்தை குறியீட்டு எண் (KSE-30) மைனஸ் 2 என்கிற அளவுக்கு குறைந்தது. Also Read "இந்தியா பாகிஸ்தான் மோதல் சமயத்தில்.. கூகுளில் அதிகம் தேடப்பட்டது என்ன! 2வது இடத்தில் பெரிய சர்ப்ரைஸ்" இப்போது சண்டை நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. அதேபோல, ஐஎம்எஃப் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பாகிஸ்தானுக்கு நிதி உதவியையும் வழங்கியிருக்கிறது. இதனால் அந்நாட்டில் முதலீடுகள் அதிகரித்திருக்கின்றன. இதனால் பங்கு சந்தை குறியீட்டு எண் 9 என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. அந்நாட்டின் பங்கு சந்தையை பொறுத்தவரை கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவு உயர்வாக இது பார்க்கப்படுகிறது. கடைசியாக 2008ல் இந்த உயரத்தை பங்கு சந்தை தொட்டது. ஐஎம்எஃப் வழங்கிய கடன் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது போர் நடந்தாலும் கூட சர்வதேச வர்த்தகம் பாதிக்கப்படாது, போட்ட பணம் பத்திரமாக இருக்கும் என்று அவர்கள் நம்பியுள்ளனர். எனவேதான் முதலீடு அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 8.5 என்கிற அளவில் பங்கு சந்தை முடிவடைந்திருக்கிறது. மறுபுறம் இந்திய பங்கு சந்தையும் உயர்வை தொட்டிருக்கிறது. நிஃப்டி50 மற்றும் சென்செக்ஸ் குறியீடுகள் 3 சதவீதம் உயர்ந்ததால் பங்கு சந்தை வர்த்தகம் அதிகரித்திருக்கிறது. சண்டை சமயத்தில் இந்திய பங்கு சந்தை, பாகிஸ்தானை போல அடி வாங்கவில்லை. பஹல்காம் தாக்குதலின்போதும், அதற்கு பதிலடி கொடுக்கப்பட்டபோதும் இந்திய பங்கு சந்தை +2 என்கிற அளவில் இருந்தது. நேற்று +3 என்கிற அளவுக்கு உயர்ந்திருக்கிறது. Recommended For You "வாலாட்டிய பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வந்த ராணுவம்.. LOC பகுதியில் நீண்ட நாட்களுக்கு பின் இரவில் அமைதி" இருப்பினும் இரு நாடுகளுக்கு இடையே இருக்கும் மோதல்கள் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. குறிப்பாக, இந்தியா சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி இருந்து. இந்த தடையை இன்னும் நீக்கவில்லை. ஆகவே பாக் பங்கு சந்தை சற்று பதற்றத்தில்தான் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது.
#IndiaVsPakistan #IndVsPak #IndiaPakistanNews #WarUpdate #BreakingNews #SayNoToWar #IndiaArmy #PakistanArmy #LOC #KashmirNews #Modi #PakNews #Geopolitics #DefenceUpdate #IndoPakConflict #LatestNews #SouthAsiaCrisis #WarFootage
Mediagrass Tamil aims at providing variety of quality content including Fun, Infotainment, Entertainment, News, Press Releases, Vlogs, Tech, movie review, cinema talks etc. We strive hard to satisfy different sets of audience across TamilNadu and ensure that our subscribers spending their time at our channel is really worthy.
Do support our channel and we welcome your feedback in any manner.
Feel free to reach out to [email protected] for any enquires and paid promotions.