MENU

Fun & Interesting

சடையா எனுமால் - தேவார பதிகம் | Sadaiyaa Enumaal - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

Video Not Working? Fix It Now

சடையா எனுமால் - தேவார பதிகம் | இசைத்தொகுப்பு : பலன் தரும் பதிகங்கள் | குரலிசை : பாம்பே சாரதா | அருளியவர் : திருஞானசம்பந்தர் | இசை : வீரமணி கண்ணன் Sadaiyaa Enumaal - Devara Pathigam | Album : Palan Tharum Pathigangal | Singer : Bombay Saradha | Rendered : Thirugnanasambandar | Music : Veeramani Kannan. பாடல்வரிகள் : திருமணம் கைகூட அருளிட வேணும் கல்யாண சுந்தரனே திருவடி சரணம் திருமணஞ்சேரியிலே கல்யாண கோலம் தரும் கல்யாண சுந்தரனே திருவடி சரணம் சடையா யெனுமால் சரண்நீ யெனுமால் விடையா யெனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள்உள் மெலிவே சிந்தா யெனுமால் சிவனே யெனுமால் முந்தா யெனுமால் முதல்வா எனுமால் கொந்தார் குவளை குலவும் மருகல் எந்தாய் தகுமோ இவள்ஏ சறவே அறையார் கழலும் மழல்வா யரவும் பிறையார் சடையும் முடையாய் பெரிய மறையார் மருகல் மகிழ்வா யிவளை இறையார் வளைகொண் டெழில்வவ் வினையே ஒலிநீர் சடையிற் கரந்தா யுலகம் பலிநீ திரிவாய் பழியில் புகழாய் மலிநீர் மருகல் மகிழ்வா யிவளை மெலிநீர் மையளாக் கவும்வேண் டினையே கோகிலாம்பாள் உடனுறையும் கல்யாண சுந்தரா திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் சர்வேஸ்வரா துணிநீ லவண்ணம் முகில்தோன் றியன்ன மணிநீ லகண்டம் உடையாய் மருகல் கணிநீ லவண்டார் குழலாள் இவள்தன் அணிநீ லவொண்கண் அயர்வாக் கினையே பலரும் பரவப் படுவாய் சடைமேல் மலரும் பிறையொன் றுடையாய் மருகல் புலருந் தனையுந் துயிலாள் புடைபோந் தலரும் படுமோ அடியா ளிவளே வழுவாள் பெருமான் கழல்வாழ் கவெனா எழுவாள் நினைவாள் இரவும் பகலும் மழுவா ளுடையாய் மருகற் பெருமான் தொழுவா ளிவளைத் துயராக் கினையே இலங்கைக் கிறைவன் விலங்க லெடுப்பத் துலங்கவ் விரலூன் றலுந்தோன் றலனாய் வலங்கொள் மதிள்சூழ் மருகற் பெருமான் அலங்கல் லிவளை அலராக் கினையே எரியார் சடையும் மடியும் மிருவர் தெரியா ததொர்தீத் திரளா யவனே மரியார் பிரியா மருகற் பெருமான் அரியாள் இவளை அயர்வாக் கினையே அறிவில் சமணும் மலர்சாக் கியரும் நெறியல் லனசெய் தனர்நின் றுழல்வார் மறியேந் துகையாய் மருகற் பெருமான் நெறியார் குழலி நிறைநீக் கினையே வயஞா னம்வல்லார் மருகற் பெருமான் உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால் இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார் வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே திருஞானசம்பந்த சம்பந்தர் சைவ சமயத்தவர்களால் நாயன்மார்கள் என அழைக்கப்படும் அறுபத்து மூவருள் முதல் வைத்து எண்ணப்படும் நால்வருள் ஒருவராவார். திருஞானசம்பந்தர் நாயனாரின் அற்புதங்கள் (பெரியபுரணம் வழி) ஞானப்பால் உண்டமை ஞானசம்பந்தப் பிள்ளையார் மூன்றாண்டு நிறையப் பெற்ற பின்னர் ஒரு நாள் காலை தந்தையாருடன் சீர்காழி திருகோயிலின் திருக்குளத்திற்குச் சென்றார். சிவபாத இருதயர் மைந்தனைக் கரையில் அமரச்செய்து நீருள் முழ்கி அகமருடஜெபம் செய்தார். தந்தையைக் காணாமையாலும், முன்னைத்தவம் தலைக்கூடியதாலும் திருத்தோணிச்சிகரம் பார்த்து “அம்மே! அப்பா!” என்று அழைத்தருளி அழுதருளினார். அப்பொழுது, திருத்தோணிபுரபெருமான் உமா தேவியாரோடும் விடைமீதமர்ந்து காட்சி கொடுத்தார். உவமையிலாக் கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞானமும் கலந்த திருமுலைப்பால் ஊட்டுவாயாக எனப்பெருமான் பணித்தார். அப்படியே பெருமாட்டியும் எண்ணரிய சிவஞானத்து இன்னமுதம் குழைத்தருளி உண் அடிசில் என ஊட்டினார். ஞானம் உண்ட பிள்ளையார் சிவஞானச்செல்வராய்த் திகழ்ந்தார். எண்ணரிய சிவஞானத் தின்ன முதங்குழைத் தருளி உண்ணடிசில் எனஊட்ட உமையம்மை எதிர்நோக்கும் கண்மலர்நீர் துடைத்தருளிக் கையிற்பொற் கிண்ணமளித் தண்ணலைஅங் கழுகைதீர்த் தங்கண்ணார் அருள்புரிந்தார். For Music Streming & Downloads Apple Music : https://music.apple.com/in/album/palan-tharum-pathikangal/459012099 Spotyfy : https://open.spotify.com/album/3tNb0PjoEmteqDJ6elxjxA?si=hDZxG0CARxC5euyZ1touuA Amazon Prine Music : https://music.amazon.in/albums/B005HMIMDS?ref=dm_sh_891f-3862-647d-5bd2-cfe3d Jiosavan : https://www.jiosaavn.com/album/palan-tharum-pathikangal/zvHx9A0po1c_ Wynk Music : https://wynk.in/music/album/palan-tharum-pathikangal/si_3698 Google Play Store : https://play.google.com/store/music/album/VeerAmani_Kannan_Palan_Tharum_Pathikangal?id=Bckjjnmmutzhadwowp5tnofb3vu&hl=en For More Videos: https://www.youtube.com/c/AmuthamMusic Facebook : https://www.facebook.com/amuthammusicofficial #Palantharumpthiganagal#osarun#bombaysaradha Amuthammusic#dailyprayers#lordsiva#thevaram

Comment