MENU

Fun & Interesting

swathy creations | திருஞானசம்பந்தரின் மறுபிறவி | மெய்கண்ட தேவர் |திருவெண்ணெய்நல்லூர் | E-86

SWATHY CREATIONS 220 lượt xem 1 year ago
Video Not Working? Fix It Now

@swathycreations22 #sidhargal #jeevasamathi #pondicherrytemple #tamilnadutemple #temple #sivankoil #sivantemple #meikandadevar #meikandaar #thiruvennainallur

இன்றைய பதிவில் நாம் காணப்போகும் காணொளி மெய் கண்ட தேவரை பற்றியதாகும்.
தொண்டை மண்டலம் திருமனைபாடி நாட்டில் திரு பெண்ணாடகம் என்ற ஊரில் வந்த அச்சுத களப்பாளர் மற்றும் மங்களாம்பிகை என்ற தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் இல்லாமல் வருந்தி சகலாகம பண்டிதரை சந்தித்து அவரின் வழிகாட்டுதலின்படி திருவெண்காடு சென்று அங்குள்ள முக்குளத்தில் அதாவது சூரிய தீர்த்தம்‌ சந்திர தீர்த்தம் அக்னி தீர்த்தம் இவற்றில் நீராடி திருவெண்காட்டு பதிகத்தினை தினமும் பாரணம் செய்து திருவெண்காடறை வணங்கினார்.
. அப்பொழுது களப்பாளரின் கனவில் தோன்றிய இறைவன் திருஞானசம்பந்தரை போன்ற குழந்தை கிடைக்கும் என கூறினார். அவ்வாறு தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது குழந்தைக்கு சுவேதவன பெருமாள் என்ன பெயரிட்டனர்.
சுவேதவன பெருமாள் மிகவும் சிவ பக்தியுடன் வளர்ந்தார்
வான் மார்க்கமாக பொதிகை மலை நோக்கி சென்று கொண்டிருந்த பரஞ்சோதி முனிவர் திருவெண்ணெய்நல்லூரில் நண்பர்களோடு விளையாடிக் கொண்டிருந்த சுவேத்வன பெருமாளை கண்டார். உடனே கீழ இறங்கி வந்து அவருக்கு மெய்ஞானம் உபதேசித்து அவருக்கு மெய் கண்டார் என்னும் திருநாமத்தை சூட்டினார்.
மெய் கண்டார் தனது குருவான பரஞ்சோதி யார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களை தமிழில் தந்தார் மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல் சிவஞான போதமாகும் .இந்நூலே பிற்காலத்தில் சந்தான ஆச்சாரியார்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
இவ்வாறாக மெய்கண்டரின் பேரும் புகழும் நாடெங்கும் பரவியது. இதனை கேள்விப்பட்ட அவரது குல ஆச்சாரியார்ஆன சகலாகம பண்டிதர் மெய்கண்டரைக் காண திருவெண்ணைநல்லூருக்கு வந்தார்.
அச்சமயம் ஊரில் உள்ள மக்கள் அனைவரும் மெய் கண்டாரின் அருளுரையை கேட்க குழுமி இருந்தனர். அப்பொழுது ஆணவம் மலத்தை பற்றி உபதேசத்தில் கொண்டிருந்தார். அப்பொழுது அவர் முன் சென்று இந்த சிறுவனுக்கு என்ன தெரியும் என்ற ஆணவத்தோடு ஆணவம் என்றால் என்ன அதன் வடிவம் என்ன என்று கேட்டார் சகலகம பண்டிதர். பதில் ஏதும் பேசாமல் மெய் கண்டார் தனது விரல்களினால் சகலாகம பண்டிதரை ஆணவத்தின் வடிவம் என சுட்டிக்காட்டினார்.
மெய் கண்ட தேவரின் அருள்நோக்கால் தன்னிலை உணர்ந்த சகலக்காம பண்டிதர் மெய் கண்டாரின் திருவடிகளில் விழுந்தார். மெய் கண்டாரிடம் தன்னை அவற்றின் சீடராக ஏற்று அருளம்படி வேண்டிக் கொண்டார். மெய்கண்டாறும் அவரை ஏற்றுக்கொண்டு சிவ தீட்சை தந்தருளி அவருக்கு அருணந்தி சிவம் என்ற திருநாமத்தை வழங்கினார்.
சைவர்களால் சந்தானக்குறவர்கள் ஒருவராக மெய் கண்ட தேவருக்கு அடுத்த நிலையில் வைத்து மதிக்கப்படுகிறார் அருள்ணந்தி சிவாச்சாரியார். இவர் மெய்கண்டாரின் சிவனான போதம் என்ற நூலை அனுசரித்து சிவஞான சித்தியார் என்னும் புகழ் பெற்ற சைவ சித்தாந்த நூலை இயற்றி அருளினார்.
இன்நூலின் சிறப்பு சிவத்தின் மேல் தெய்வமில்லை சிவஞான சித்திக்கு மேல் சாத்திரம் இல்லை என வழங்கும் பழமொழியே சான்றாகும்.
இவர் 13ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவராக கருதப்படுகிறார். இவர் சைவ சித்தாந்த கோட்பாடுகளை தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர் இவர்களுள் அருணந்தி சிவாச்சாரியார் தலை சிறந்தவர். மெய்க்காண்டாரின் இன்னொரு மாணவரான மணவாசகம் கடந்தார் என்பவர் உண்மை விளக்கம் என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
மெய்கண்டதேவர் ஐப்பசி மாத சுவாதி நட்சத்திரத்தில் முத்தி அடைந்தார். இவரின் குருபூஜை தினத்தை சைவர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

sri meikandadevar thirukoil
thiruvennainallur,
villupuram dist.
mobile no. 9944997413

Comment