சிவனடியவள் தமிழம்மா
Sivanadiyaval Thamizhamma
ஓம் நமசிவாய..
தமிழ் இலக்கணம் ஐந்து வகைப்படும்.
1.எழுத்திலக்கணம் ,
2.சொல்லிலக்கணம், 3.பொருளிலக்கணம், 4.அணியிலக்கணம், 5.யாப்பிலக்கணம்
மேற்கண்ட ஐவகை இலக்கணங்களையும் தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப்பொருள் விளக்கம், புறப்பொருள் வெண்பாமாலை, தண்டியலங்காரம், யாப்பருங்கலக் காரிகை நூல்களின் மூலமாக விளக்குவதே எனது முதல் நோக்கம்.
மேலும் திருக்குறள் முதலான தமிழ் இலக்கிய நூல்களின் விளக்கங்களும் ஜோதிடம் தொடர்பான பதிவுகளும் வழங்கப்படும்.
குறிப்பு : தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கிய நூல்களைப் படித்துப் புரிந்து கொண்டவற்றை எனது சிற்றறிவிற்கு எட்டிய வகையில் விளக்க முயற்சி செய்கிறேன். *தமிழ் இலக்கணத்தைக் கசடறக் கற்போம்* என்று என்னையும் இணைத்தே கூறுகின்றேன். நான் விளக்குவதில் பிழைகள் இருக்கலாம். ஏனெனில் "நாம் படிக்கும் அனைத்தும் நூல்களும் படிக்கப் படிக்க ஒவ்வொரு முறையும் புதிய விளக்கங்களையும் புதுப் பொலிவுடன் விளங்கக் கூடியவையே"
ஏதேனும் பிழை இருப்பின் பொறுத்தருள்க. நன்றி. திருச்சிற்றம்பலம்
#சிவனடியவள்தமிழம்மா#SivanadiyavalTamizhamma#