பேரூர் ஆதீனம் | Perur Aadheenam
திருக்கயிலாயப் பரம்பரை மெய்கண்ட சந்தானம் #பேரூராதீனம்
அருள்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம்
பதினாறாம் நூற்றாண்டில் அருள்மிகு சாந்தலிங்கரால் நிறுவப்பட்டு உலகளவில் சைவமும், தமிழும் தழைக்கத் தொண்டாற்றி வருகிறது.
சத்வித்யா சன்மார்க்க சங்கத்தின் மூலம்
சமய வகுப்புகள்,
திருக்குட நீராட்டு,
வாழ்வியல் சடங்குப் பயிற்சிகள்,
அம்பலவாணர் வழிபாட்டுக் குழு மூலம் சிறப்பு நாள் கட்டளைகள், அன்னதானப் பணிகள்
ஆதிய தொண்டுகள் நடைபெறுகின்றன.
தவத்திரு சாந்தலிங்க அடிகளார் சத்வித்யா சன்மார்க்க சங்க அறக்கட்டளை மூலம்
(80G வரிவிலக்கு உண்டு)
மாணாக்கர்கட்குச் சமயப் பயிற்சி,
இலக்கியப் போட்டிகள்,
குறள்நெறி பரப்புக் குழு,
கல்வி உதவித் தொகை வழங்குதல்,
அன்னம் பாலிப்பு,
இலவச மருத்துவ மையம்,
தொழில் பயிற்சி,
உடைக்கொடை,
ஊர்தோறும் விழிப்புணர்வுப் பயணம்,
குருதிக்கொடை
ஆதிய தொண்டுகள் நடைபெறுகின்றன.
அன்பு இல்லம் வழி ஆதரவற்ற குழந்தைகளுக்குக்
கல்வி,
உணவு,
உடை நல்குதல்,
முதியோர் பேணல்
ஆதிய தொண்டுகள் நடைபெறுகின்றன.
மேலும் பல
தொண்டுகள் | பணிகள்
நடைபெறுகின்றன.